in

குதிரையில் சென்று வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்


Watch – YouTube Click

குதிரையில் சென்று வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது..

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ராஜேஷ் போட்டியிடுகின்றனர்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பிரதான கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுவதால் நான்கு முனை போட்டியாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தென்னூர் எம்ஜிஆர் நகர், வவண்ணாரப்பேட்டை, குமரன்நகர், பட்டாபிராமன் தெரு ஆகிய பகுதிகளில் குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார்.


Watch – YouTube Click

What do you think?

திமுக சேர்மன் கட்சியினருடன் வாக்கு சேகரிக்க சென்ற போது வாக்குவாதம்

தர்கா பகுதியில் அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி