in

கரூர் அதிமுக வேட்பாவை ஆதரித்து எம் ஆர் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரில் வாக்கு சேகரித்தார்


Watch – YouTube Click

கரூர் அதிமுக வேட்பாவை ஆதரித்து எம் ஆர் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரில் வாக்கு சேகரித்தார்

 

பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையை இரவு, பகல் பாராமல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கவேல் அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கிராம கிராமமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று வேட்பாளர் தங்கவேல் கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக எம் ஆர் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான ஆண்டாங் கோயில் கீழ் பாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தனது கட்சி நிர்வாகிகள் உடன் இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

கரூர் பாராளுமன்ற தொகுதி கடந்த முறை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு சென்ற நிலையில் தற்போது அதனை அதிமுக கோட்டையாக தக்க வைக்க முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தீவிர முயற்சி காட்டி வருகிறார்.

அதிமுக வேட்பாவை ஆதரித்து நாள்தோறும் மாலை நேரங்களில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கிளைக் கழக அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

கணவனின் முகமூடி அணிந்து உழவர் சந்தை சிறு வியாபாரிகளிடம் ஓட்டு கேட்ட மனைவி

பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ப்பு