in

சிக்கல் சிங்காரவேலவர் காளியம்மன் ஆலய காளி திரு நடனம்

சிக்கல் சிங்காரவேலவர் காளியம்மன் ஆலய காளி திரு நடனம்

 

50க்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக் கலைஞர்கள் இசையில் அதற்கேற்ப நடனமாடும் காளி திரு நடன காட்சி 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிக்கல் சிங்காரவேலவர் காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவில் கோலாகலம்:

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் முன்னூறு ஆண்டு பழமை வாய்ந்த சிங்கார காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது இவ்வாலயத்தின் ஆண்டு ஆடி பெருவிழா கடந்த 28 தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி, பூச்சர்களுடன் தொடங்கியது.

நேற்று இரவு துர்க்கை அம்மன் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.

அதனை எடுத்து இன்று காளி திரு நாடக காட்சி மற்றும் வீதி உலா தொடங்கியது. காப்பு கட்டிவிரதம் இருந்த பக்தர்கள்காளியை உடலில் கட்டிக் கொண்டு 50க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் இசைத்தபடி முன்னே செல்ல அதற்கு ஏற்ப காளி நடனமிடம் திரு நடன காட்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காளி அசுரனை வதம் செய்யும் படுகல நிகழ்ச்சி தத்துரூபமாக நடைபெற்றது. முன்னதாக சிங்கார காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் சுற்றுலா கிராமங்கள் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் ஏழு நாட்கள் நடைபெறும் விழாவில் வரும் 10 தேதி இரவு அம்பாளுக்கு வெள்ளை உடுத்தி இரண்டு காளி திரு நடனம் ஒன்றாக நடைபெற்று ஆலயம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பெருவிழா

எந்த அடிப்படையில் எனக்கு விருது கொடுத்தாங்க….. நடுவர் குழுவை காட்டுகாட்ன்னு காட்டிய நடிகை ஊர்வசி