in

அதிமுக சார்பில் நீர் மோர்பந்தல் திறப்பு விழா


Watch – YouTube Click

அதிமுக சார்பில் நீர் மோர்பந்தல் திறப்பு விழா

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எல்லா காலத்திலும் உரிய நேரங்களில் மக்களை காத்தவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது எந்த காலத்திலும் இல்லாத வகையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்களை பாதுகாக்கும் வகையில் நீர் மோர் பந்தல்களை திறக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

அதன் பெயரில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று முடிந்துள்ள தமிழக பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே தான் போட்டி தமிழகத்தில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அது அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையிலான போட்டியாக தான் இருக்கும்.

தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் முடிவுகள் வரும் போது மக்களுக்கு தெரிய வரும் என தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற கஞ்சா பழக்கம் இதுவரை இல்லாத அளவில் பள்ளி கல்லூரிகளில் கஞ்சா பழக்கம் ஜரூராக நடைபெற்ற வருகிறது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

ஜப்பானியர்களால் அடிமையாக்கப்பட்ட தமிழ் இனம்

ராணுவத்தில் வீர மரணம் அடைந்த சாமி கண்ணன் மனைவியிடம் ராணுவ அதிகாரி பாராட்டி பரிசுகளை வழங்கினர்