in

அக்கட தேசத்தில் நம்பர் ஒன் நடிகராவேன்…. சூறாவளியாக சுற்றும் சூர்யா…

அக்கட தேசத்தில் நம்பர் ஒன் நடிகராவேன்…. சூறாவளியாக சுற்றும் சூர்யா… தமிழ் பக்கம் வருவாரா? நடிப்பு நாயகன்

நடிகர் சூர்யாவையும் கார்த்தியும் வளர்த்து விட்டவர் நான் தான் என்று அமீர் காட்டுகத்தலாக கத்தினாலும் இவர்களின் பிரச்சினைக்கு இன்னும் சூர்யாவும் கார்த்திக்கும் வாய் திறக்காமல் மௌனமாக தான் இருக்கிறார்கள்.

ஆனால் தற்பொழுது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புதிதாக மும்பையில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அந்த திறப்பு விழாவிற்கு சிவகுமார் சூர்யா மற்றும் கார்த்தி சென்று தனது வாழ்த்துக்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

வளர்த்துவிட்டு டைரக்டரை மறந்து விட்டு புதிய தயாரிப்பாளரோடு இணைந்த பின்னணி என்ன என்று சிலர் அவர்கள் காதுபடவே நன்றியை மறந்தவர்கள் என்று திட்டுகிறார்களாம்.

தமிழ் சினிமாவில் சாதித்த சூர்யா தற்பொழுது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார். தனது 2D நிறுவனம் மூலம் அக்‌ஷய் குமாரை வைத்து சூரரை போற்று படத்தை ஹிந்தியில் தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அடுத்ததாக தனது கிரீன் ஸ்டூடியோவையும் பாலிவுட்டில் திறக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

நடிகை ஜோதிகா சூர்யாவை மும்பைக்கு அழைத்துச் சென்றது அவரை உலக அளவில் பெரிய நடிகராக ஆக்க வேண்டும் என்று தான் சூர்யாவை வைத்து கர்ணா என்னும் வரலாற்று படம் பிரமாண்டமாக பாலிவுட்டில் தயாராகி வருகிறது.

‘கர்ணா’ படத்தை தொடர்ந்து நடிக்கும் சூர்யா இனிவரும் காலங்களில் பல பாலிவுட் படங்களின் நடிக்க இருக்கிறார். ஆனால் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தின் நிலைமை தான் என்ன என்று இதுவரை தெரியவில்லை.

சூர்யா திரும்பவும் தமிழ் பக்கம் வருவாரா என்று பலர் கேட்கும் கேள்விக்கு பதில் தான் இன்னும் சூர்யாவின் பக்கத்திலிருந்து வரவில்லை. பொழைக்க தெரிந்த மனிதர் சூர்யா.. அதற்காக வாய்ப்பு கிடைக்காதவர்களெல்லாம் திறமையற்றவர்கள் அல்ல…. நம்மை தேடிவரும் வாய்ப்புகளை பயன்படுத்தி நம்மை மெருகேற்ற வேண்டும்.

What do you think?

தெலுங்கு நடிகர்களை கிழிதெடுத்த ராதிகா ஆப்தே

அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்த புள்ளி மானை பத்திரமாக மீட்டு காட்டில் விட்ட வனத்துறையினர்