in

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்


Watch – YouTube Click

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்….

2024 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது .இந்த நிலையில் மக்கள் காலை 7 மணி முதல் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நட்சத்திர தொகுதியாக கருதப்படக் கூடிய விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். விருதுநகர் பகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் சிவகாசி திருத்தங்கள் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


Watch – YouTube Click

What do you think?

மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்