in

மது போதையில் பெற்ற மகள்களுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது


Watch – YouTube Click

மது போதையில் பெற்ற மகள்களுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது

 

மது போதையில் பெற்ற மகள்களுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை. வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டிய போதும் சைல்டு ஹெல்ப்லைனுக்கு போன் செய்த மகள்கள். போக்சோ சட்டத்தின் கீழ் தந்தையை கைது செய்த போலீசார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட அகரத் திருமாளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை வயது 42. இவர்  கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். செல்லதுரைக்கு  திருமணமாகி 20 வருடங்கள் ஆன நிலையில் 19 மற்றும் 17 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வருடம் செல்லத்துரையின் மனைவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து செல்லத்துரை தனது இரு மகள்களுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் செல்லதுரை மது போதைக்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் செல்லத்துரை மது போதையில் தனது இரு மகள்களுக்கும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று தொடர்ந்து மகள்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மகள்கள் இருவரும் தந்தைக்குத் தெரியாமல் சைல்டு ஹெல்ப் லைனுக்கு போன் செய்து இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நேரில் வந்த அதிகாரிகள் சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் தந்தை அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. தொடர்ந்து நன்னிலம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த தையடுத்து காவல்துறையினர் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தந்தையே மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

எங்களை ஏன் சோதிக்கிறீர்கள் என கேரளாவை சேர்ந்த நபர் கேட்டதற்கு காவலர் அசத்தல் பதில்

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்