in ,

மத்திய அரசிடம் நிதியை கூட பெற முடியாத திமுக


Watch – YouTube Click

மத்திய அரசிடம் நிதியை கூட பெற முடியாத திமுக

 

மத்திய அரசிடம் நிதியை கூட பெற முடியாத திமுக அரசுக்கு ஆட்சி எதற்கு என அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு

விருதுநகரில் பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று அதிமுக தலைமை அறிவுறுத்தலின் பெயரில் திமுக அரசை கண்டித்து பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையிலும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் முன்னிலையிலும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர்கள் கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா க.பாண்டியராஜன் ஆகியோர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

கண்ட ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பட்டியலிடம் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து நியாயம் கேட்பதாகவும்.

மத்திய அரசிடம் நிதியை கூட பெற முடியாத திமுக அரசுக்கு ஆட்சி எதற்கு எனவும்,

அனைத்து வரிகளையும் உயர்த்தி மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடன் வாங்கி பொதுமக்களுக்கு ஏதேனும் நலத்திட்டங்கள் செய்திருக்கிறார் எனவும்’

இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி இருப்பதாகவும் தெரிவித்தார். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

குளித்தலை 1200 பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா