in

கல்வாரியில் வெடி விபத்து மூன்று பேர் பலி எட்டு பேர் படுகாயம்


Watch – YouTube Click

கல்வாரியில் வெடி விபத்து மூன்று பேர் பலி எட்டு பேர் படுகாயம்

 

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே கீழ உப்பிலிகுண்டு பகுதியில் செயல்பட்டு வந்த கல்வாரியில் வெடி விபத்து மூன்று பேர் பலி எட்டு பேர் படுகாயம்.

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே கீழ உப்பிலி குண்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .

இந்த நிலையில் வழக்கம்போல் கல்குவாரி பணிக்கு சுமார் இருபது க்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் திடீர் வெடி விபத்து.

மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் சதரி பலியாகி உள்ளனர். மேலும் எட்டு பேர் காயமடைந்து காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து தகவல் அறிந்து அந்த கல்குவாரி அருகே உள்ள கடம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் கல்குவாரியை மூட வலியுறுத்தி மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற கல்குவாரியில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

நீர் வழி ஓடையைமண்ணைப் போட்டு மூடி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விவசாயிகள் புகார்

டி20 இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ