in

திமுக காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிப்போம் என திருச்சியில் பாஜக தேசிய தலைவர் நட்டா பரப்புரை


Watch – YouTube Click

திமுக காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிப்போம் என திருச்சியில் பாஜக தேசிய தலைவர் நட்டா பரப்புரை

 

திமுக காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிப்போம் என திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா பரப்புரை

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வாகன பேரணி நடத்தி பரப்புரை செய்தார்.

முன்னதாக திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பாஜக தேசிய தலைவர் நட்டா பங்கேற்கும் வாண வேடிக்கைகளுடன் தாமரை சின்னத்தில் நடனம் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்திருந்தனர். சரியாக 7.30 ஏழு முப்பது மணிக்கு துவங்கிய வாகன பேரணியானது 8 மணிக்கு உறையூர் நாச்சியார் கோவில் பகுதியை வந்தடைந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி எட்டு மணிக்கு முடிக்க வேண்டிய காரணத்தால் ஒரு சில வார்த்தைகளை வாகன பேரணி முடிவடையும் இடத்தில் பேசினார்.

அமமுக வேட்பாளர் செந்தில்நாதனனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க நட்டா கேட்டு கொண்டார். மத்திய அரசுக்கு ஆதரவு தருவீர்களா. திமுக காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிப்போம் என்றார். நேரம் முடிந்ததால் சில வார்த்தைகளை பேசி விட்டு நட்டா புறப்பட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி சாலை ரோடு பகுதியில் இருந்து உறையூர் நாச்சியார் கோவில் வரை 1.5 கிலோமீட்டர் தூரம் பாஜக தேசிய தலைவர் நட்டா பங்கேற்கும் ரோட் ஷோவிற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றம் அனுமதித்த நேரம் மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை.

திருச்சி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை வரை ஏற்கனவே ரோடு ஷோவிற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகர காவல்துறை இடம் அனுமதி கேட்டு இருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தை நாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி வேறு இடத்தில் மாற்று பாதையில் ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கினர்.


Watch – YouTube Click

What do you think?

நொச்சிக்குளத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி

கோயில் யானை இடம் ஆசிர்வாதம் பெற்று பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர்