in

கோயில் யானை இடம் ஆசிர்வாதம் பெற்று பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர்


Watch – YouTube Click

கோயில் யானை இடம் ஆசிர்வாதம் பெற்று பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர்

 

கோயில் யானை இடம் ஆசிர்வாதம் பெற்று மயிலாடுதுறை நகரில் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வேட்பாளர்கள் வீதி வீதியாக திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் திரு பாபு இன்று மயிலாடுதுறை நகரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த வேட்பாளர் பாபு மயூரநாதர் கோயில் யானைக்கு பழங்கள் அளித்து ஆசிர்வாதம் பெற்றார்.

தொடர்ந்து கோயில் கோசாலையில் அமைந்துள்ள பசுக்களுக்கு வாழைப்பழம் வழங்கி தரிசனம் பெற்றார். தொடர்ந்து மயிலாடுதுறையில் நகரில் பல்வேறு வார்டுகளில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Watch – YouTube Click

What do you think?

திமுக காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிப்போம் என திருச்சியில் பாஜக தேசிய தலைவர் நட்டா பரப்புரை

மீனவர்கள் கரை திரும்ப ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு