in

பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து மஞ்சள் பை உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


Watch – YouTube Click

பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து மஞ்சள் பை உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

 

விருதுநகரில்தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து மஞ்சள் பை உபயோகிப்பது சம்மந்தமான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ….

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக நிர்வாக இயக்குனர் குழந்தைவேல் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சுற்று சூழப் பொறியாளர் ராமராஜ் கொடியசைத்து விழிப்புணர்வு கலைப்பயணத்தை தொடங்கிவைத்தார்.

மேலும் இந்த கலைநிகழ்சியில், நிலத்தில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குடிதண்ணீர் பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது என்றும், மேலும் நிலத்தில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிலம் நச்சுத்தன்மை அடைவதோடு அவை நிலத்தில் தங்கி மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதோடு மட்டுமல்லாமல் விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது எனவும்,

பிளாஸ்டிக்கை எரிக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் டையாக்சின் என்ற நச்சுப்புகை காற்றில் கலந்து மாசுபடுவதோடு மட்டும் அல்லாமல் அந்த காற்றை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, புற்றுநோய் ஆகிய கொடிய நோய்களுக்கு ஆளாக நேரிடவதாகவும் ஆகையால் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதை தடுக்க வேண்டும் ,

மேலும் வனத்துறைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் அவற்றை உண்ணும் வனவிலங்குகளும், பறவைகளும் இறக்கின்றன என்றும், கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் அவைகளை உண்ணும் கடல்வாழ் உயிரினங் களும் இறக்கின்றன என்றும்

எனவே பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்பற்றியும், ஆகையால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து மஞ்சள் பையை உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கலைநிகழ்சிகள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பழனி மலை படிக்கட்டுகளில் உடலை வில்லாக வளைத்து நடந்து சிறுவன் சாதனை

சலுகைகளை வாரி வழங்கும் வேளாண் பட்ஜெட்