in

சனி பிரதோஷம் சதுரகிரியில் குவிந்த ஏராளமான பக்தர்கள்


Watch – YouTube Click

சனி பிரதோஷம் சதுரகிரியில் குவிந்த ஏராளமான பக்தர்கள்

 

சனி பிரதோஷம் சதுரகிரியில் குவிந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம்.

இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் சனிப் பிரதோஷம் மற்றும் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய இன்று முதல் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வரை நான்கு நாட்கள் அனுமதி அளித்துள்ளனர்.

இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வனத்துறையினர் தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்களிடம் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மதுபானத்திற்கு “வீரன்” என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வில்லியனூர் மாதா திருத்தலத்தின் 147வது ஆண்டு திருவிழா‌ கொடியேற்றம்