in

பழனி கிரிவலப்பாதையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆக்கிரமிப்புகளில், மீதமிருந்த 14 ஆக்கிரமிப்பு வீடுகளும் இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன

பழனி கிரிவலப்பாதையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆக்கிரமிப்புகளில், மீதமிருந்த 14 ஆக்கிரமிப்பு வீடுகளும் இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அடிவாரம், மேற்கு கிரிவீதியில் அண்ணா செட்டி மடம் பகுதியில் இருந்த 120-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக கடைகள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த 2024-இல் முதற்கட்டமாக 120 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

​அதன் தொடர்ச்சியாக, வழக்குகளில் சிக்கி நிலுவையில் இருந்த மீதமுள்ள 14 ஆக்கிரமிப்பு கட்டிடங்களும், இன்று வட்டாட்சியர் மற்றும் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடிக்கப்பட்டன.

​ 10 கோடி மதிப்புள்ள நிலம் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் திருக்கோவில் நிர்வாகத்தால் சுமார் 1,317 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பழனி அடிவாரம் கிரிவீதியில் மீட்கப்பட்ட 10 கோடி ரூபாய் சொத்துக்களையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 1,327 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பெறப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What do you think?

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆதிமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

*புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அதிகாரிகள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்* புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவுப்படி பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போர்வையில் வியாபாரிகளை மிகவும் அவமான கரமாகவும் திருடர்களைப் போல் மோசமாக நடத்துவதாகவும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் கொடூரமான முறையில் நடந்து கொள்வது அரசுக்கு சரியல்ல தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து அமைச்சர்கள் இன்றும் முழுமையாக பதவி ஏற்காத சூழ்நிலையில் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறேன் என்ற போர்வையில் பேனர்களை உடைப்பது கடைகளை உடைப்பது என்று மிகவும் மோசமான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் வியாபாரிகளின் ஆதரவோடு தான் இந்த ஆட்சி அமைந்துள்ளது இந்த வியாபாரிகள் கொடுக்கும் வரியால் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது அதிகாரிகள் இப்படி கடுமையாக நடப்பது குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஏதோ திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் விதமாக போல் தெரிகிறது வியாபாரிகளுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் அதிகாரிகள் உண்மையைச் சொல்லி இதற்கான விளக்கத்தைப் பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களுக்கான அரசாங்கமும் வியாபாரிக்கான அரசாங்கமும் தான் இந்த அரசாங்கம் என்று அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்