in

திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீத வருவாய் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


Watch – YouTube Click

திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீத வருவாய் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

 

திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீத வருவாய் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில பொருளாளர் சோம சுந்தரம் பேட்டி

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும்.

இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பணிக்கு செல்லாமல் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டம் 1 முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் போன்றவை வெறிச்சோடி காணப்பட்டன.மேலும் இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம் கூறுகையில் திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை சுமார் 90 சதவீத ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் 456 வருவாய்த்துறை ஊழியர்களின் 411 பேர் வேலை எடுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

நெல்லை கல்குவாரி ஊழல் விவகாரம் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு

ரயிலை நிறுத்திய தம்பதியினருக்கு முதல்வர் பாராட்டை தெரிவித்து ரூபாய் 5 லட்சம் வெகுமதி