in ,

ஸ்டெர்லைட் வழக்கு 20 ஆம் தேதி இறுதி விசாரணை


Watch – YouTube Click

ஸ்டெர்லைட் வழக்கு 20 ஆம் தேதி இறுதி விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று தொடங்கியது. அதன்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனையை உச்சநீதிமன்றம் முன் வைத்தது.

மேலும், தற்போது உள்ள இடத்தில் அமைந்துள்ள காப்பர் தொழிற்சாலை அமைந்திருப்பது சரியா என்றும், இது தொடர்பில் சுற்றுசூழல் மீறப்பட்டிருந்தால் அதற்கான எவ்வளவு அபராதம் தொகை விதிக்க வேண்டும் என்ற விவரங்களை நிபுணர் குழு ஒரு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கிய போது உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய யோசனையை வேதாந்தா நிறுவனம் ஏற்று கொண்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, நிபுணர் குழு அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தெரிவித்தது. இதையடுத்து இறுதி விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது


Watch – YouTube Click

What do you think?

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட1000 க்கும் மேற்பட்டோரை கைது

திருச்சி பெல் நிறுவன ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்