in

சென்னையில் பயங்கர விபத்து 8 பேர் பலி


Watch – YouTube Click

சென்னையில் பயங்கர விபத்து 8 பேர் பலி

சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத்திற்கு சுற்றுலா நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

15 பேர் படுகாயம் அடைந்தனர்.ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் லாரியை வேறு பக்கம் திருப்பி உள்ளார்.

அப்போது, எதிரே சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்த சுற்றுலா பேருந்தின் மீது லாரி வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேரையும் உடனடியாக மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழந்த எட்டு பேரின் உடல்களும் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு தற்போது நெல்லூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து குறித்து சென்னையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் நேரில் வந்து அடையாளம் காட்டிய பின்னர் தான் உயிரிழந்தவர்களின் விவரம் பற்றி முழு விவரம் தெரியவரும் எனககூறப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

அச்சிடபட்டுள்ள தேதியில் இருந்து மேலும் 15 நாட்கள் வரை வைத்து பக்தர்கள் பயன்படுத்தலாம்

குஷ்புவை ஆபாசமாக பேசியவர் திமுகவில் மீண்டும் ஐக்கியம்