in

சாத்தூரில் மினி பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி


Watch – YouTube Click

சாத்தூரில் மினி பேருந்து ஓட்டுனர் நெஞ்சுவலியால் சாலையோர கடையில் மோதி விபத்து டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழஒட்டம்பட்டியை சேர்ந்தவர் ராஜாக்கனி(35).இவர் சாத்தூரில் மினி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.வழக்கம்போல பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ்சை ஒ.மேட்டுப்பட்டி செல்வதற்காக 15-பயணிகளுடன் ஓட்டி சென்றுள்ளார்.சாத்தூரை அடுத்து பெரியகொல்லப்பட்டி விளக்கு அருகே செல்லும்போது திடீரென ராஜாக்கனிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மினி பஸ்ஸை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாலத்தின் சுவற்றில் உரசிக்கொண்டு சாலையோரத்தில் இருந்த அமீர்பாளையத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான ஃபாஸ்ட் ஃபுட் கடையில் மீது மோதி, பின்னர் அருகே உள்ள ஊர் பெயர் பலகையில் மோதி நின்றது.

டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குருநாதன்(19) மற்றும் சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்(55) மற்றும் மினிபஸ் ஓட்டுநர் ராஜாக்கனி ஆகிய மூவரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

இயக்குனர் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்ட கொள்ளையர்கள்

மருந்து கடை மற்றும் பேக்கரி உடைப்பு முகமூடி திருடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை