in

உலக நாடுகள் ஆச்சர்யப்படும் வகையில், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி


Watch – YouTube Click

உலக நாடுகள் ஆச்சர்யப்படும் வகையில், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி

 

உலக நாடுகள் ஆச்சர்யப்படும் வகையில், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியடைந்திருப்பது இந்தியா தான், என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசினார்.

திருச்சி, சத்திரம் பகுதியில் உள்ள திருமதி இந்திரா காந்தி மகளிர் கல்லுாரியில், மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

உலகத்தில் எங்கு சென்றாலும், தேசியம் தான் நம்மை முன்னெடுத்துச் செல்கிறது. இன்று, இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியடைந்திருப்பது இந்தியா தான்.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், அந்த அனுபவம் கிடைக்க வேண்டும், என்று பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் தொழில் நுட்பம், பண பரிமாற்றத்துக்கு மட்டுமின்றி, கொரோனா காலக்கட்டத்தில், மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

பள்ளி, கல்லுாரிகளில் அந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் முன்னேற்றத்துக்கான எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில், பலதரப்பட்ட பாகுபாடுகள் இருந்தாலும், அனைத்து தரப்பிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான், ‘டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ என்ற தொழில் நுட்பம். நல்ல முன்னேற்றமடைந்த நாடுகளை போல், இந்தியாவும் 2047 க்குள் அந்த நிலையை அடைய முடியும்.

தற்போது, அந்த நம்பிக்கை வருவதற்கு காரணம், கடந்த 10 ஆண்டுகளில் பல உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம். கடந்த 70 ஆண்டுகளாக, சிறு சிறு துளிகளாக நாடு முன்னேற்றம் அடைந்ததை மாற்றி, மிக வேகமாக, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் முன்னேற்றமடைய செய்ய வேண்டும், என்று திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் பிரதமர்.

நாட்டின் அடித்தட்டில் உள்ள மனிதனுக்கும் பயன்பட வேண்டும், என்ற நோக்கம், ‘டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ வாயிலாக நிறைவேறி உள்ளது. முன்னேற்றத்தில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட முடியாது.

சீனாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. ஆனால், இந்தியாவில் சுதந்திரம், ஜனநாயகம் உள்ளிட்டவை மதிப்பு மிகுந்ததாக உள்ளது. பொருளாதாரத்தில், இந்தியா பத்தாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவோம். மூன்றிலிருந்து நல்ல நிலைக்கு முன்னேறுவோம். அதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்  கொடியேற்றத்துடன் துவங்கியது

7 ஆண்டாக கோயில் திருவிழா நடத்த தடை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு