in

பொதுமக்களிடம் பாடல் பாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் பொதுமக்கள்


Watch – YouTube Click

பொதுமக்களிடம் பாடல் பாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரிச்சந்திரபுரம் வடபாதிமங்கலம் கொத்தூர் ஓவர்சேரி பழையனூர் பூந்தாலங்குடி ஓகைப்பேரையூர் வேளுக்குடி பூதமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பொதுமக்கள் ஆரத்தி எனக்கு வரவேற்றனர் மேலும் அரிச்சந்திராபுரம் ஊராட்சியில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க நாட்டுப்புற பாடல் பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மன்னார்குடி திமுக ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் வடபாதிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சித்தரஞ்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


Watch – YouTube Click

What do you think?

விக்னேஷ் சிவனுக்காக போயஸ் கார்டனில் புதிய அலுவலகம் கட்டும் நயன்…

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்