in

தன் மகளை காப்பாற்ற கட்சியை விற்று விட்டார் சரத்குமார்…. கொந்தளிக்கும் கட்சி உறுப்பினர்கள்

தன் மகளை காப்பாற்ற கட்சியை விற்று விட்டார் சரத்குமார்…. கொந்தளிக்கும் கட்சி உறுப்பினர்கள்

அரசியலின் தற்போதைய ஹாட் டாப்பிக்கே சரத்குமார் தன் கட்சியை பாஜகவில் இணைத்தது தான்.

இதனால் அவர் கட்சிக்குள் உட்பூசல் நிலவுகிறது. தனது 15 வருட கட்சியை பாஜகவுடன் சேர்த்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

அதாவது தன் மகளை காப்பாற்ற தான் அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கின்றனர்.

சரத்குமாரும் பாஜகவும் எலியும் பூனையுமாக இருந்த நிலையில் திடீரென்று அடுத்த ராத்திரியில் அண்ணாமலைக்கு போன் செய்து அவர் கட்சியில் இணைவதாக கூறிவிட்டாராம்.

யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் கட்சியில் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். இவர் தன்னுடைய மனைவி ராதிகாவிடம் மட்டும் சஜஷன் கேட்டிருக்கின்றார்.

ஏனென்றால் அவருடைய மகள் வரலட்சுமி தற்போது ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார். இவரின் பர்சனல் அசிஸ்டெண்டாக இருந்த ஆதிலிங்கம் ஆயுதம் மற்றும் பல கடத்தல் வழக்குகளில் மாட்டிருக்கிறார். அதில் வரலட்சுமி மீது கூட பல கேஸ்கள் பைலாகி இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து சரத்குமார் இடமும் விசாரணை நடைபெற்ற நிலையில் இதிலிருந்து தப்பிப்பதற்காக கட்சியை பாஜகவுடன் இணைக்க ராதிகா ஐடியா கொடுத்திருக்கிறார்.

அவரின் பேச்சைக் கேட்டு தான் இப்படிப்பட்ட முடிவை எடுத்து இருக்கிறாராம் சரத்குமார்.

மேலும் இதனால் கட்சியில் இருக்கும் பல உறுப்பினர்கள் வெளியேறி இருக்கிறார்களாம். கட்சியை பற்றி நினைக்காமல் தன்னுடைய சுய லாபத்திற்காக தன் கட்சியை விற்று விட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகிறது… அரசியலில் இதெல்லாம் சகஜம் …பா என்று ராதிகா கூறிவிடாராம்.

What do you think?

தமிழ்நாடு போலிஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநராக தேன்மொழி ஐ பி எஸ்

இப்படியெல்லாமா பணம் சம்பாதிப்பீர்கள்? அனிதா சம்பத்தை வறுத்தெடுத்த நெடிசன்கள்