in

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம்


Watch – YouTube Click

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம்

 

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தங்கவேல் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதி முழுவதும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர், வடக்கு பாளையம், புரவிபாளையம், புலியூர் கடைவீதி, காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பிரச்சார வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

முன்னதாக வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், பொன்னாடை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜோதிமணிக்கு கை சின்னத்தில் போடும் ஓட்டும், நோட்டாவுக்கு போடுற ஓட்டும் ஒன்னுதான். ஜோதிமணி நமக்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரு கூட தான் இருக்கிறார்.

தண்ணீர் திறந்து விட கேட்கல, தொகுதிக்குள்ள வராமல் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொள்கிறார் என கூறி அதற்கான புகைப்படங்களை வாக்காளர்களிடம் காண்பித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

மேலும் காங்கிரஸ் சார்பா ஜோதிமணி வாக்கு சேகரிக்கும் இடங்கள் எல்லாம் பொதுமக்கள் விரட்டி வருகிறார்கள் இதனால் ரவுடிகளை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு என குற்றச்சாட்டு.


Watch – YouTube Click

What do you think?

செந்தில் பாலாஜி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள சென்டிமென்ட் பாடல்

உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு தொல்லை