in

முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து கட்சத்தீவை மீட்போம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி


Watch – YouTube Click

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து கட்சத்தீவை மீட்போம் திருச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

திமுக கூட்டணி சார்பில், திருச்சி லோக்சபா தொகுதியில் மதிமுக வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது….
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருப்பதாக, அவர்கள் தான் கூறிக் கொள்கின்றனர். உண்மையில் இந்தியா கூட்டணிக்கு தான் கன்னியாகுமரி முதல் இமயமலை வரை வெற்றி வாய்ப்பு உள்ளது. இலங்கை அரசு ஒரு இனத்தை அழித்துவிட்ட அகங்காரத்தில் பேசி கொண்டிருக்கிறது. அன்றைய நெருக்கடியான சூழலில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டது. அப்போதே திமுக சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் ஒரு பிடி மண்ணை கூட இலங்கைக்கு விட்டு தர மாட்டோம். நீதிமன்றம் மூலம் கச்சத்தீவை மீட்க,முதல்வருடன் சேர்ந்து முயற்சி எடுக்கப்படும்.

மதிமுகவின் தனித்தன்மையை பாதுகாத்துக் கொள்வதற்காக, சொந்த சின்னத்தில் தான் நிற்போம் என்று முதல்வரிடம் பேசிவிட்டு, முடிவு செய்தோம். ஏற்கனவே போட்டியிட்ட பம்பரம் சின்னம் கிடைக்காததால் தீப்பெட்டி சின்னத்தை பெற்று அதில் போட்டியிடுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்


Watch – YouTube Click

What do you think?

சனி மகா பிரதோஷம் தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம்

பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பேச்சு