in

கண்டக்கோட்டை பகுதியில் கல்குவாரி அமைக்க R D O தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம்


Watch – YouTube Click

கண்டக்கோட்டை பகுதியில் கல்குவாரி அமைக்க R D O தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம்

 

விருதுநகர் மாவட்டம் ம.ரெட்டியபட்டி அருகே கண்டக்கோட்டை பகுதியில் கல்குவாரி அமைக்க R.D.O தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம்*

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ம.ரெட்டியபட்டி அருகே அருகே கண்டக்கோட்டை கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக ம.ரெட்டியபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கல்குவாரி அமைப்பது தொடர்பாக ப்ரொஜக்டர் ஒளித்திரை மூலம் பொதுமக்களுக்கு குவாரி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஒரு தரப்பு விவசாயிகள் கல் குவாரி அமைப்பதற்கு ஆதரவாக பேசினர். அதேவேளையில், மற்றொரு தரப்பினர் பேசும்போது, கண்டக்கோட்டை, பொம்மகோட்டை, காளையார் கரிசல்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்கனவே ஏராளமான கல்குவாரிகள் உள்ள நிலையில் மீண்டும் ஒரு கல் குவாரி அமைப்பதால் விளைநிலங்கள் மற்றும் அருகே உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் நிலத்தடி நீர் பாதிப்பிற்குள்ளாகி விவசாயமும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், குவாரி செயல்பட அனுமதி அளிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட1000 க்கும் மேற்பட்டோரை கைது