in ,

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு 


Watch – YouTube Click

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு

 

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்
மாணிக்கம் தாகூரின் வெற்றி உறுதியாகிவிட்டது என சிவகாசியில் நடைபெற்ற தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து சிவகாசி மாநகராட்சி உட்பட்ட பராசக்தி காலணியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஒவ்வொரு வீடு வீடாகவும் வணிக நிறுவனங்களுக்கும் நேரடியாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்து மாணிக்கம் தாகூருக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அசோகன் எம்.எல்.ஏ,  மேயர் சங்கீதா இன்பம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், மாநகராட்சி தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காமராஜர் பூங்கா அருகில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசியதாவது, இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகிவிட்டது.

உங்களின் எழுச்சியை பார்த்து மகிழ்ச்சியாகஇருக்கிறது. இப்போது தொடங்கியுள்ள எழுச்சியும், இதே ஆரவாரமும் கடைசி வரை இருக்க வேண்டும். பொது மக்களை நேரில் சந்தித்து தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை கூறி மகளிர் அணியினர் வாக்கு சேகரிக்க வேண்டும். நம்முடைய ஒரே இலக்கு மாணிக்கம் தாகூர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் கடுமையாக இன்று முதல் வாக்கு பதிவு முடியும் வரை கடுமையாக உழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

கொல்கத்தா 106 ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி

ஒற்றை விரலை வைத்து ரசம் சோறு கூட திங்க முடியாது- திண்டுக்கல்லில் ஐ லியோனி கிண்டல் பேச்சு