in

அடர்ந்த வனப்பகுதியில் சட்ட விரோதமான மதுபானஆலை கண்டுபிடிப்பு


Watch – YouTube Click

அடர்ந்த வனப்பகுதியில் சட்ட விரோதமான மதுபானஆலை கண்டுபிடிப்பு

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குமரத்துகுடிபட்டி அருகில் உள்ள அடர்ந்த வன பகுதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து சிங்கம்புணரியை சேர்ந்த ராமசாமி மனைவி மங்கலம் வயது 45 என்ற பெண்மணி ரகசிய சட்டவிரோதமான மதுபான ஆலை நடத்தி வந்ததாக தெரிகிறது.

குமரத்தகுடிப்பட்டி அடர்ந்த வனப்பகுதியில் ரகசிய சட்டவிரோத மதுபான ஆலை செயல்படுவதாக வந்த தகவலை அடுத்து சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு தடுப்பு கூடுதல் ஏடிஎஸ்பி பிரான்சிஸ் நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆலையை கைப்பற்றி அங்கிருந்த சுமார் 3500 லிட்டர் எரிசாராயம் உள்பட எரிசாராயம் தயாரிக்க பயன்படுத்திய பாட்டில் மூடி ஸ்டிக்கர் மற்றம் தளவாடங்கள் என சுமார் ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்களயைும் பறிமுதல் செய்து மதுபான ஆலைக்கு சீலீட்டனர்.

அதை தொடர்ந்து மதுபான ஆலை நடத்திய பெண் மங்கலம் உள்பட மூன்று பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

குடும்பம், குழந்தை, தொழில் இல்லை காசு சம்பாதிக்க வேண்டிய தேவையில்லை ஜோதிமணி பேச்சு

மோசமான பித்தலாட்ட பாஜகவை ஒழித்துகட்ட வேண்டிய தேர்தல் – சிவா, எம்.எல்.ஏ