in ,

வீட்டில் கண்ணாமூச்சி ஆடியபோது எதிர்பாராதவிதமாக நடந்த பரிதாப சம்பவம்


Watch – YouTube Click

சிவகாமிபுரம் காலனியில் வீட்டில் கண்ணாமூச்சி ஆடியபோது எதிர்பாராதவிதமாக துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார பாண்டியன்(வயது 43), அச்சகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறார். இவருக்கு காமேஷ் அருண்குமார்(12) கமலேஷ் வருண்குமார்(12) என்ற இரட்டை குழந்தைகளும், சக்தி காவியாஸ்ரீ(8) என்ற மகளும் உள்ளனர். காமேஷ் அருண்குமார், கமலேஷ் வருண்குமார் இருவரும் சிவகாசியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். செல்வகுமார பாண்டியனும், அவரின் மனைவியும் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டனர்.

கோடைவிடுமுறை என்பதால் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வீட்டின் படுக்கை அறையில் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தபோது, தொட்டிலுக்காக போடப்பட்டிருந்த துணி காமேஷ் அருண்குமார் கழுத்தில் எதிர்பாராதவிதமாக சுற்றி இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயக்கமடைந்து கீழேவிழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிள்ளைகள், சத்தம்போட்டு அலறிடவும் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மயக்கமடைந்த நிலையில் கிடந்த காமேஷ் அருண்குமாரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காமேஷ் அருண்குமார் ஏற்கனவே
இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காமேஷ் அருண்குமார் உடல், உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’.


Watch – YouTube Click

What do you think?

எலி பேஸ்ட் உட்கொண்ட சிறுமிக்கு மீனாட்சி மருத்துவமனையின் பிளாஸ்மா ஃபெரிசிஸ் மேம்பட்ட சிகிச்சை

மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோவில் கிராம மக்கள் முன்னிலையில் தாசில்தார் திறந்து வைத்தார்