in

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி


Watch – YouTube Click

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி

 

திருவாரூர் நகராட்சி அருகே திமுக சார்பில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி உறுதி ஏற்பு நிகழ்ச்சி. எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மகாத்மா காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்கின்ற சர்ச்சைக்குரிய கருத்தை அண்மையில் பேசியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு திமுகவினர் சார்பில் காந்தி நினைவு தினத்தை யொட்டி காந்தியின் சிலை அல்லது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியையும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினர் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு மத நல்லிணக்க உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதில் காப்போம் காப்போம் மனித நேயம் காப்போம் விரட்டுவோம் விரட்டுவோம் மதவெறியை விரட்டுவோம் காப்போம் காப்போம் வேற்றுமையில் ஒற்றுமையை காப்போம் வேரறுப்போம் வேரறுப்போம் மதவாத சக்திகளை வேரறுப்போம் என் பண உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி உறுதிமொழி ஏற்பில் பங்கேற்றனர்.

இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

விரைவில் விஜய் கட்சி பெயர் அறிவிப்பு

சுகாரதரம் இல்லாமல் உள்ள மருத்துவமனை சட்டமன்ற உறுதிமொழி குழு கேள்வி