in

நண்பர்களுடன் சென்ற கார்பாலத்துக்குள் கவிழ்ந்து விபத்து


Watch – YouTube Click

நண்பர்களுடன் சென்னையிலிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சி மாவட்டம் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள பாத்திமா நகர் பகுதியில் உள்ள ஆத்து பாலம் தடுப்பு கட்டையில் மாலை இனோவா கார் ஒன்று வேகமாக வந்து மோதி, மோதிய வேகத்தில் ஆற்றுப் பாலத்துக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது, இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காரில் சிக்கி இருந்த நான்கு பேரை மீட்டனர் இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்துள்ளனர், மேலும் இது குறித்து மணிகண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், இந்த தகவலைத் தொடர்ந்து மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆற்றுப் பாலத்துக்குள் சிக்கி இருந்த இனோவா காரை மீட்டனர், மேலும் விசாரணையில்

திருவள்ளூர் அம்பத்தூர் புத்தூர் குமரன் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் இவரது மகன் கணேஷ் பாபு என்பவர் இவர் தனது நண்பர்களான சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்த ரவி, சென்னை பாலமுருகன், சென்னை கம்பர் நகர் மதன்குமார் ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து இன்னோவா காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தபோது விபத்துக்கு உள்ளானது தெரிய வந்தது

விபத்தில் இறந்தது கணேஷ் பாபு மற்றும் ரவி எனவும் மேலும் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் மதன்குமார் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கொடைக்கானல் மலையில் காட்டுத்தீ புகை மண்டலமாக காட்சியளிக்கும் மலை கிராமங்கள்

தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் குற்றாலம்