இரட்டணை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா
இரட்டணை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா 13- நாள் வில்வளைப்பு நிகழ்வு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னிவசந்த விழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 13ம் நாள் நிகழ்வாக மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில்பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வில்வளைப்பு உற்சவத்தை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ அர்ஜுனர், ஸ்ரீ சுபத்திரை ஆகிய தெய்வங்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


