in ,

பொது தேர்வில் காப்பி அடித்தால் 10 ஆண்டு சிறை – 1 கோடி அபராதம்


Watch – YouTube Click

பொது தேர்வில் காப்பி அடித்தால் 10 ஆண்டு சிறை – 1 கோடி அபராதம்

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வட மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்வு வினாத் தாள்களை வேண்டுமென்றே கசிய விடும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட், ஜேஇஇ, க்யூட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகள், தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தேமுதிக – பாஜக கூட்டணி

அமெரிக்க அரசியலில் ஜோ பைடன் ஆதரவு சரிவு