in ,

விஜய பிரபாகரன் முரசு சின்னத்தில் போட்டி தேமுதிக செயல் வீரர் கூட்டத்தில் தீர்மானம்


Watch – YouTube Click

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் முரசு சின்னத்தில் போட்டியிட வேண்டும் தேமுதிக செயல் வீரர் கூட்டத்தில் தீர்மானம்

சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செய்யது காஜா செரிப் தலைமை வகித்தார். அவை தலைவர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விருதுநகர் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக 3.5 லட்சம் வாக்குகளை பெற்றது. அனைத்து பகுதியிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த மக்களவை மக்கள் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன், முரசு சின்னத்தில் போட்டியிட வேண்டும். அவரது வெற்றிக்கு அனைத்து நிர்வாகிகளும் பணியாற்ற வேண்டும். தேமுதிக அங்கமாய்க்கும் கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் முத்துவேல், துணைச் செயலாளர் பவானி ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி, கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெயில் முத்து, குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மாணவ மாணவிகள் – பத்மஸ்ரீமுனுசாமி கைவினை கலைஞர் பேட்டி

நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கிடா முட்டு போட்டி