in

ரஜினி கொடுத்த வாக்கை இன்னும் காப்பாற்ற வில்லை … நடிகை லக்ஷ்மி அவேசம்

ரஜினி கொடுத்த வாக்கை இன்னும் காப்பாற்ற வில்லை … நடிகை லக்ஷ்மி அவேசம்

கதாநாயகியாக இருந்து பிறகு குணச்சித்திர நடிகையாக மாறியவர் நடிகை லட்சுமி. ரஜினி தன்னிடம் கொடுத்த வாக்கை இன்னும் காப்பாற்ற வில்லை அவரைப் பார்த்தால் நிச்சயம் இதைப் பற்றி நான் கேட்பேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

பேட்டியில் நடிகை லட்சுமி கூறியதாவது நான் ஆரம்ப காலகட்டத்தில் நடித்ததை இன்றும் என்னால் மறக்கவே முடியாது. நான் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றேன் அம்மாவாகவும் நடித்திருக்கின்றேன் மாமியாராகவும் நடித்திருக்கின்றேன் வந்த வாய்ப்பு எல்லாம் நான் தட்டியதில்லை.

அந்த காலத்திலேயே நான் சில திரைப்படங்களில் டை அடித்து வயதான கெட்டப்பில் நடித்திருக்கிறேன். நான் சூட்டிங்கில் இருக்கும் பொழுது பல நடிகைகள் அவர்களைப் பற்றிய குடும்ப விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

அதை நினைக்கும் பொழுது எனக்கு சிரிப்பாக தான் இருக்கும், ஒருமுறை ஸ்ரீவித்யா அவர் பிரச்சினை பற்றி என்னிடம் கூறிக் கொண்டிருக்கும் பொழுது ஏன் இதை என்னிடம் கூறுகிறீர்கள் என்று கேட்டபோது உங்களிடம் சொன்னால் தான் இந்த விஷயம் வெளியே போகாது என்று கூறினார்.

நான் ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்து விட்டால் என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என் வீட்டில் ஒரு ஊஞ்சல் இருக்கும் அதில் உட்கார்ந்தால் என் மனம் இலகுவாக மாறிவிடும் சிறிது நேரம் புத்தகம் படிப்பேன் என் குழந்தையை பார்த்துக் கொள்வதே எனது முழு வேலையாக நான் கருதுவேன் அப்படிதான் என்னுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

ஒரு முறை நான் கேரளாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் பாலசந்தர் அவர்கள் திடீரென்று போன் செய்து நீ உடனே சென்னைக்கு திரும்ப வேண்டும் என்றார், என்னால் எப்படி உடனே வர முடியும் என்று கேட்டதற்கு நான் ட்ரெயின் டிக்கெட் புக் செய்து விட்டேன் நாளை காலை இங்கு வந்து விடு என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

நானும் வேறு வழி இல்லாமல் அந்த இயக்குனரிடம் கூறிய சம்பந்தம் வாங்கி அடுத்த நாளே சென்னைக்கு புறப்பட்டேன். அப்பொழுது இயக்குனர் பாலச்சந்தர் நெற்றிக்கண் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அதில் ஒரு சில காட்சிகலில் மட்டுமே நான் நடித்தேன் இதற்காகவா என்னை கூப்பிட்டீர்கள் என்று நான் கூறிய பொழுது எனக்காகவே ரஜினி ஒரு சில காட்சிகளை அந்த படத்தில் வைத்தார். பிறகு நான் இயக்கும் அடுத்த படத்தில் நிச்சயம் நீ தான் கதாநாயகி என்று கூறினார் ரஜினி ஆனால் இன்று வரை அந்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை.

அவரை நான் நேரில் சந்தித்தால் நிச்சயம் இது பற்றி கேட்பேன், கதாநாயகியாக அவர் நடத்தில் நடிக்க இன்னும் நான் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வேன் என்று நகைச்சுவையாக கூறினார்.

What do you think?

கேப்டன் விஜயகாந்த்தை போல இந்த நடிகரும் பல இயக்குனர்களை வாழ வைத்தவர்.

பிப்ரவரி 23 செலிப்ரிட்டி கிரிக்கெட் லீகில் (CCL) தொடங்குகிறது… கேப்டன் ஆர்யா பேட்டி