திண்டிவனம் இலுப்ப தோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலய கூழாத்தல் திருவிழா
திண்டிவனம் இலுப்ப தோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலய கூழாத்தல் திருவிழா 3ம் நாள் இரவு வீதி உலா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலய கூழ் வத்தல் திருவிழா மூன்றாம் நாளை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கையில் சிவலிங்கத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மேலும் கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது.


