மயிலாடுதுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
மயிலாடுதுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வாயில் அலகு குத்தி பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்ததாண்டவபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவிலில் 34 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா உற்சவம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் காவிரி தீர்த்த கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு பின்னே அழகு காவடிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலயம் வந்தடைந்தனர் தொடர்ந்து ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் தீமிதித்த பக்தர்களுக்கு ஐதீக முறைப்படி சாட்டையடி பெற்று திரௌபதி அம்மனை வழிபட்டனர்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர் நிறைவாக பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


