in

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மோட்ச தீபம்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மோட்ச தீபம்

 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடப்பட்டது. இதில் ஆற்றின் இருகரைகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆற்றில் மோட்ச தீபம் விடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடி 18 ஐ முன்னிட்டு மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காவிரித்தாயை வணங்கி வழிபடும் வகையிலும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாடு சுபிட்சம் பெற வேண்டியும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோட்ச தீபத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் மேளதாளங்கள் முழங்க மோட்ச தீபம் காவிரி ஆற்றுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

இதையடுத்து அந்த தீபத்தை பரிசலில் வைத்து காவிரி ஆற்றின் மையப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆற்றின் இருகரையிலும் திரண்டு நின்று மோட்ச தீபத்தை வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்புக்காக பரமத்திவேலூர் டிஎஸ்பி சங்கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

What do you think?

அழகான வில்லனாக நடித்துள்ளேன் நாகர்ஜுனா

நாமக்கல் பரமத்தி வேலூர் பெத்தாண்டார் ஆலயத்தில் ஆடி18 முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம்