in

வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பூத்தூவி வரவேற்பு


Watch – YouTube Click

வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பூத்தூவி வரவேற்பு

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பூத்துவி வரவேற்பு அளித்த பொதுமக்கள்

வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு என்பது நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வைத்து செல்வராஜ் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக இன்று திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS விஜயன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உலகநாதன் சிவபுண்ணியம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து ஓவர்சேரி இருள்நீக்கி விக்கிரபாண்டியன் ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் ஈடுபட்டார்.


Watch – YouTube Click

What do you think?

நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு ‘”செக்”

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தீவிர பிரச்சாரம்