in

காளியப்பனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா


Watch – YouTube Click

காளியப்பனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

கரூர் தான்தோன்றி கிராமம் காளியப்பனுர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காவிரி கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது.

பின்னர் இன்று யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டிய பிறகு மேளதாளங்கள், வான வேடிக்கையுடன் பூஜிக்கப்பட்ட தீர்த்த கலச குடத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்து வாரு கோபுரம் கலசம் வந்தடைந்தார்.

அதை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் பகவதி அம்மனுக்கு நான்கு சாலை யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ந்து அனைத்து பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோமாதா பூஜையும் நடைபெற்றது. கரூர் காளியப்பனுர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் மாசி மாத பொங்கல் திருவிழா

முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் வட்டமிட்டு சுற்றிய கருடபகவான்