in

அம்பானியை அழ வைத்த ஆனந்த அம்பானி… ஆனந்த அப்படி என்ன கூறி இருப்பார்?


Watch – YouTube Click

அம்பானியை அழ வைத்த ஆனந்த அம்பானி… ஆனந்த அப்படி என்ன கூறி இருப்பார்?

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபரான என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்சன்ட்-டின் மகளான ராதிகாவிற்கும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிச்சயதார்த்திற்கு உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் வருகை தந்தனர்.

ஜாம்நகர் விமான நிலையத்திற்கு தற்பொழுது சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு வந்த பிரமுகர்களை முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தம்பதிகள் உற்சாகமாக வரவேற்று தன் வருங்கால மகளான ராதிகாவை பிரபலங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.

திருமண நிகழ்ச்சியின் போது ஆனந்த அம்பானி உருக்கமாக பேசியதாவது…

எனக்காக எனது குடும்பத்தினர் பல தியாகங்களை செய்துள்ளனர் என் வாழ்க்கை முழுவதும் ரோஜா பூக்களால் மலர்ந்தது அல்ல சிறுவயதில் இருந்தே நான் பல உடல் உபாதை பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன்.

ஆனால் அப்பொழுதெல்லாம் என் அம்மாவும் அப்பாவும் என்னுடன் துணையாக இருந்து என் கஷ்டங்களை பகிர்ந்துள்ளனர் நான் கஷ்டபடும் தருணத்தில் எல்லாம் அவர்கள் என்னுடன் இருந்தனர் என்றார்.

ஆனந்த அம் பானி உருக்கமாக பேசியதை கேட்ட அம்பானி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். ஆனந்த அம்பானி பருமன் பிரச்சனையால் பல உடல் உபாதைகள் ஏற்பட்டது நிறைய சிகிச்சைகளுக்குப் பிறகு தற்பொழுது உடல் எடையை குறைத்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

கரூரில் எமதர்மன் வேடமணிந்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகை ரெஜினா