திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ஸ்ரேயா சரண்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசித்தார் பிரபல திரைப்பட கதாநாயகி ஸ்ரேயா சரண்.
அவர் இன்று விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.
தரிசனத்திற்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.