in

வட்டார கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து


Watch – YouTube Click

வட்டார கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் வட்டார கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பதிவேடுகள் எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டையில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. தா.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பதிவேடுகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த பதிவு கோப்புகள் இங்கு பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஹோட்டல் வெளியில் மர்ம நபர்கள் வைத்த தீ எதிர்பாராத விதமாக நேற்று இரவு அலுவலகத்தில் ஜன்னல் வழியே பரவியுள்ளது. இதில் இரவு முழுவதும் கோப்புகள் தீயில் எரிந்து சாம்பலானது.

இன்றுஅலுவலகத்திலிருந்து புகை வந்ததால் அப்பகுதியினர் தா.பேட்டை காவல் நிலையத்திற்கும், முசிறி தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தீ பற்றி எரிந்ததால் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எஸ் ஆர் புக் பதிவேடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

தகவல் அறிந்து அலுவலகத்திற்கு வந்த வட்டார கல்வி அலுவலர்கள், கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் ஓட்டத்துக்கு இந்திய அணிகள் தகுதி தமிழக வீரர்கள் அசத்தல்

12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகள்