in ,

குரூப் 4 தேர்வு விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்கள் செய்யலாம்


Watch – YouTube Click

குரூப் 4 தேர்வு விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்கள் செய்யலாம்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று (மார்ச் 4) முதல் வரும் 6-ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்தவகையில் கிராமநிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜன.30-ம் தேதி தொடங்கியது.

இதற்கிடையே குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப். 28-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. எழுத்துத் தேர்வு ஜூன் 9-ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. தமிழ் தகுதித் தாள் 100, பொது அறிவுத் தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 4) முதல் வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வழியே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

காசாவில் போர் நிறுத்தம் கமலா ஹாரிஸ் அழைப்பு