in

ஆசை என்பது ஒரு புள்ளி. சாதனை என்பது இன்னொரு புள்ளி

ஆசை என்பது ஒரு புள்ளி. சாதனை என்பது இன்னொரு புள்ளி

 

ஆசை என்பது ஒரு புள்ளி. சாதனை என்பது இன்னொரு புள்ளி. இரண்டையும் இணைக்காம விடமாட்டேன் கங்கணம் கட்டிய ஜெயம் ரவி.

தனி ஒருவன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா எப்பொழுது இரண்டாம் பாகம் எடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் ஜெயம் ரவியும் பொன்னியின் செல்வன் படத்தில் கமிட் ஆனதால் மற்ற இயக்குனர்களின் படத்தில் அவறால் நடிக்க முடியவில்லை. பொன்னியின் செல்வன் வெற்றியை பற்றி ஜெயம் ரவி எல்லா பிரஸ்மீட்டிலும் சிலாகித்து புகழ்ந்து தள்ளியதால் மணிரத்தினம் மெர்சல் ஆகிய தனது அடுத்த படமான ‘தக் லைப்’ படத்திலும் பொன்னியின் செல்வன் நடிகர்களை கமிட் பண்ணி விட்டார்.

38 வருடங்கள் கழித்து மணிரத்தினமும் உலக நாயகமும் இணைந்து இருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. கமலுடன் இணைந்து த்ரிஷா, துல்கர் சல்மான் கௌதம் கார்த்திக் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் .

பிக் பாஸ் சீசன் 7 எப்பொழுது முடியும் என்று காத்திருந்த மணிரத்தினம் தற்பொழுது படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். பெரிய இயக்குனர் பெரிய நடிகர் என்று ஆசைப்பட்டு ஜெயம் ரவி மாட்டிக் கொண்டு தற்பொழுது முழிக்கிறாராம்.

ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் வெளியானது நீண்ட இடைவெளி இக்கு பிறகும் தன்னால் இரண்டாம் பாகத்தை தொடங்க முடியவில்லையே என்று மோகன்ராஜ் , ஜெயம் ரவியால் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஜெயம் ரவியும் ‘Thug Life’ ஷூட்டிங்கில் மாட்டி கொண்டதால் இருதலை கொல்லி எறும்பாக தவித்து வருகிறார், எப்படியாவது டிசம்பருக்குள் தக் லைப் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு தனி ஒருவன் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

தனி ஒருவன் டூ பாகத்தில் அமீர்கான் வில்லனாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலை விரும்பியவர்கள் உப்பு நீரை குடித்துதான் ஆக வேண்டும் என்று இப்போதுதான் ஜெயம் ரவிக்கு தெரிந்து இருகிறது.

What do you think?

கிராமிய விருதை தட்டி சென்ற இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் இசை குழு..

படத்தைப் பார்த்துட்டுப் படுத்தா, கேவலமான கனவுகள் தான் வருது… கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்