உலகநாயகன் கமல்ஹாசன் ஸ்டேட்மென்ட் தான் செம வைரல்!
தளபதி விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ஆன்லைன்ல லீக் ஆனது இப்போ இந்திய சினிமாவையே அதிர வச்சிருக்கு.
விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு முன்னாடி வர்ற இந்தப் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையான்னு ரசிகர்கள் கண்ணீர் விட்டுட்டு இருக்காங்க.
இந்த விவகாரத்துல இப்போ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் கொடுத்திருக்கிற ஸ்டேட்மென்ட் தான் செம வைரல்!
படம் லீக் ஆன விஷயம் தெரிஞ்சதும், ரஜினி தன்னோட ‘X’ தளத்துல ரொம்ப ஆவேசமா ஒரு போஸ்ட் போட்டிருக்காரு. “பல நூறு கோடி முதலீடு, எத்தனையோ பேரோட உழைப்பு.. இப்படித் திருட்டுத்தனமா ஆன்லைன்ல ரிலீஸ் பண்ணது அதிர்ச்சியாவும், வேதனையாவும் இருக்கு. இந்த வேலையைப் பார்த்தவங்களை அரசாங்கம் சும்மா விடக்கூடாது. கடுமையான தண்டனை கொடுக்கணும்!” அப்படின்னு ஒரு கலைஞனா தன்னோட குமுறலை வெளிப்படுத்தியிருக்காரு தலைவர்.
ரஜினியைத் தொடர்ந்து சூர்யா, சிவகார்த்திகேயன், குஷ்பூன்னு ஒரு பெரிய பட்டாளமே பைரசிக்கு எதிரா குரல் கொடுத்துட்டு இருக்காங்க.
ஆனா, உலகநாயகன் கமல்ஹாசன் இதைப் பத்தி கொஞ்சம் வித்தியாசமான, அதேசமயம் ரொம்பவே காட்டமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்காரு.
“ஜனநாயகன் லீக் ஆனது ஒரு விபத்து கிடையாது; இது நிர்வாகத் தோல்வியால் வந்த முடிவு! எல்லாமே சரியான நேரத்துல நடந்திருந்தா இப்படி நடந்திருக்காது. சென்சார் சான்றிதழ் கொடுக்கத் தாமதம் பண்ணது தான், திருட்டுத்தனமா படம் லீக் ஆக வழி வகுத்துடுச்சு!”
அப்படின்னு சிஸ்டம் மேல இருக்குற தப்பை கமல் சுட்டிக்காட்டியிருக்காரு.
“பைரசி தப்புதான்.. ஆனா அதுக்கு இடம் கொடுத்த அந்த நிர்வாகச் சிக்கலை முதல்ல சரி பண்ணுங்க”ன்னு கமல் சொன்னது இப்போ ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பியிருக்கு!
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்ன சொல்லிருக்காருன்னா, “3 மணி நேரம் 2 நிமிஷம் ஓடுற ஒரு படத்தை எப்படி இவ்வளவு அசால்ட்டா திருடி ரிலீஸ் பண்றாங்க? இதுல பலரோட கனவு இருக்கு”ன்னு ரொம்பவே வருத்தப்பட்டுப் பேசியிருக்காரு.
இப்போ KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இந்த வீடியோவை ஷேர் பண்றவங்க மேல கிரிமினல் நடவடிக்கை எடுப்போம்னு எச்சரிக்கை கொடுத்திருக்காங்க.
விஜய்யோட கடைசி படத்துக்கு இப்படி ஒரு சோதனையா? கமலஹாசன் சொன்ன மாதிரி இது சிஸ்டத்தோட தப்பா? இல்ல ரஜினி சொன்ன மாதிரி இது ஒரு பெரிய கிரிமினல் வேலையா? நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க!