அவங்களுக்கு மனவலிமை ரொம்ப கம்மி நடிகர் ஆனந்தராஜ் பேட்டி
தென்னிந்திய சினிமாவுலயே தன்னோட வசீகர அழகாலயும், கிறங்கடிக்கிற டான்ஸாலயும் எல்லாரையும் கட்டிப்போட்டு வச்சிருந்தவங்கதான் நடிகை சில்க் ஸ்மிதா.
‘திராவிட பேரழகி‘ன்னும் இவங்களைச் சொல்லுவாங்க.
தமிழ் மட்டும் இல்லாம, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல நடிச்சிருக்காங்க.
ஆனா, அவ்வளவு பெரிய உச்சத்தில இருந்த சில்க் ஸ்மிதா, 1996-ஆம் வருஷம் திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.
இப்போ, சில்க் ஸ்மிதாவோட மரணம் பத்தி நடிகர் ஆனந்தராஜ் ஒரு பேட்டியில சொன்ன விஷயம் ரொம்ப வைரல் ஆகிட்டு இருக்கு.
அவர் என்ன சொல்லியிருக்காருன்னா. “சில்க் ஸ்மிதா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டு. என்கூட நிறைய படங்கள்ல நடிச்சிருக்காங்க. அவங்க இறக்குறதுக்கு ஒரு நாளுக்கு முன்னாடி கூட எனக்கும் அவங்களுக்கும் ஒரு குத்துப் பாட்டு ஷூட் பண்ணினோம்.
ஆனா, அடுத்த நாளே அவங்க இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன்.
அவங்க இப்படி ஒரு முடிவெடுக்க முக்கியக் காரணம், அவங்களுக்கு இருந்த மன அழுத்தம்தான்.
அவங்களுக்கு மனவலிமை ரொம்ப கம்மியா இருந்துச்சு. ஒருவேளை அவங்க உயிருடன் இருந்திருந்தா, இப்போ வரைக்கும் கண்டிப்பா நடிச்சுக்கிட்டுதான் இருப்பாங்க”ன்னு ஆனந்தராஜ் சொல்லியிருக்காரு.


