in

தென்சருக்கை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

தென்சருக்கை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தென்சருக்கை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா…

திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தென்சருக்கையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ திரௌபதி ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் ,காவடி ,அலகு காவடி திரளான பக்தர்கள் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவில் அருகே உள்ள திடலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் அம்மன் வீதி உலா வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

 

அங்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது .

விழாவில் தென்சருக்கை கிராம நாட்டாமைகள், கிராமவாசிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

What do you think?

ஆஷாட நவராத்திரி விழா 6 ஆம் நாளான மாதுளை அலங்காரம்

இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு