தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச விழா திருத்தேர் உற்சவம்
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச விழா எனப்படும் ஞானபுரீசுவரர் விழாவின் ஒரு பகுதியாக திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. மூன்று யானைகள் முன்னே செல்ல, தர்மபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீனத்திருமடம் அமைந்துள்ளது. இங்கு பழைமைவாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதனை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி பத்து நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் திருத்தேற்கு எழுந்தருளினர்.
அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு ரதம் விதிகள் வழியாக வலம் வந்தது இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதுக்கு நேரா இருக்குது முன்னதாக தேருக்கு முன்னே தருமபுரம் திருவையாறு, திருக்கடையூர் ஆகிய ஆலயங்களைச் சேர்ந்த யானைகள் முன்னே செல்ல பிரம்மாண்டமான முறையில் கைலாய வாத்தியங்களுடன் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.