in

மயிலாடுதுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் 8 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் 8 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

 

மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் 8 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா; வாயில் 16 அடி நீள அலகு குத்தியும், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியது காண்போரை ‌மெய்சிலிர்க்க வைத்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கழனிவாசல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கோவில் உள்ளது.
இக்கோவிலின் 8ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விழா கடந்த 5ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு, வில்வளைப்பு, திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் தூது, அரவான் பலியிடுதல், கர்ணமோட்சம் என்று வரலாறு சிறப்புமிக்க நிகழ்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான 15 ஆம் நாளான இன்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.காலை பால்குடம் எடுத்தல், துரியோதனன் படுகளம் முடிந்தது.

அதனை தொடர்ந்து கடலாழி ஆற்றங்கரையில் இருந்து பம்பை மேளம் முழங்க வானவேடிக்கையுடன் சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும் கோவிலை வந்தடைந்தனர்.

அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் நடந்து வந்தும் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

மேலும், விண்ணைமுட்ட கண் கவரும் வானவேடிக்கை பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. இரவு அம்மன் சிறப்பு வண்ணமலர் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

What do you think?

அதிகாலையில் கரடி கூண்டில் சிக்கியது

புகழ்பெற்ற தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் விழா