in

மன்சூர் அலிகான் ஆவேச பேச்சு! பிரியாணியோட compare பண்ண ஜனநாயகம் ’சூடா சாப்பிட்டால்தான் இல்லன்னா வேற!


Watch – YouTube Click

 

விஜய்யோட ‘ஜனநாயகன்’ படம் இப்போ ரிலீஸ் ஆகாம தள்ளிப்போயிட்டே இருக்குறது, அந்தப் படத்துல நடிச்சவங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு பெரிய இடியா விழுந்திருக்கு.

குறிப்பா, நம்ம மன்சூர் அலிகான் அவரோட ஸ்டைல்ல செம உருக்கமா சில விஷயங்களைச் சொல்லியிருக்காரு.

பொங்கலுக்கு வரும்னு எதிர்பார்த்த ‘ஜனநாயகன்’ இப்போ கோர்ட், கேஸ்னு இழுத்துட்டு இருக்குறது எல்லாருக்கும் வருத்தம்தான். கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிச்ச இந்தப் படம், ஆரம்பத்துல இருந்தே ஏகப்பட்ட அரசியல் சர்ச்சையில சிக்கியிருக்கு.

ஜனவரி 9-ம் தேதியே படம் வந்திருக்கணும். ஆனா, சென்சார் போர்டு ‘நோ’ சொன்னதால தள்ளிப்போச்சு.”உடனே யு/ஏ (U/A) குடுங்க”ன்னு சொன்னாரு. அப்போ எல்லாரும் குஷியானாங்க.

“அதெல்லாம் முடியாது, தனி நீதிபதி போட்ட உத்தரவை ரத்து செய்றோம். மறுபடியும் மொதல்ல இருந்து விசாரிங்க”ன்னு சொல்லி அந்த உத்தரவை தூக்கி அடிச்சிட்டாங்க. இதனால படம் ரிலீஸ் ஆகுறது இப்போ ஒரு பெரிய கேள்விக்குறியா நிக்குது.

இந்தப் படத்துல நடிச்ச மன்சூர் அலிகான் கிட்ட இதைப் பத்தி கேட்டப்போ, அவர் செம ஃபீலாகி ஒரு விஷயம் சொன்னாரு.

“சூடா சாப்பிட்டால்தான் அது பிரியாணி. ரெண்டு மாசம் கழிச்சுச் சாப்பிடுறது பிரியாணி கிடையாது. அதே மாதிரிதான் ஒரு படமும். கரெக்ட் டைமுக்கு அது ரிலீஸ் ஆகணும். இப்படித் தள்ளிப்போறது ரொம்ப வேதனையா இருக்கு!” அவர் சொன்னது நிஜம்தானே? ஒரு அரசியல் படம்னா அந்தந்த சீசனுக்கு வந்தாதான் அதோட பவர் இருக்கும். இப்படி இழுத்தடிச்சா அது தயாரிப்பாளருக்கும் நஷ்டம், ரசிகர்களுக்கும் ஏமாற்றம்.

சமூக வலைதளங்கள்ல ரசிகர்கள் இப்போ கொந்தளிக்க ஆரம்பிச்சிட்டாங்க. “ஒரு படத்தை இப்படி தடுத்து வைக்கிறது படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?”ன்னு கேள்வி கேக்குறாங்க.

அரசியல், ஜனநாயகம் பத்தி பேசுற படம்ங்கிறதாலயே இதுக்கு இவ்வளவு செக் வைக்கிறாங்களோன்னு சினிமா வட்டாரத்துல பேசிக்கிறாங்க.


Watch – YouTube Click Shorts

What do you think?

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம். 

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்- மலைக்கோயில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிப்பு