திருவாடனை அருகே சிறுவன், சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 14 வயது சிறுமி, 17 வயது சிறுவன் இருவரும் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வரும் நிலையில் சிறுவன் சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளான் .
ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியுள்ளது இருவரும் பல தடவை தனிமையிலும் இருந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகி உள்ளார். தனது பிள்ளை கர்ப்பமாகியதை தெரிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


